FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 June 2019

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும் - செங்கோட்டையன்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்துபின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் நாடு முழுவதும்மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாதமாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறுபரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைபின்பற்றப்படும் நிலையில், மீண்டும் இந்தி திணிப்பு முயற்சிநடைபெறுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் பின்பற்றப்படும் இரு மொழிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை என்றும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழிபரிந்துரையை தமிழக அரசு ஏற்காது என்றும்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment