FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

14 October 2017

மின்வாரிய அலுவலகத்தில் உதவித்தொகையுடன் தொழில்பழகுனர் பயிற்சி விழுப்புரம் மின்வாரிய அலுலகத்தில், ஐ.டி.ஐ., தொழில்பழகுனர் பயிற்சிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மின்வாரிய அலுவலகத்தில் உதவித்தொகையுடன் தொழில்பழகுனர் பயிற்சி
விழுப்புரம் மின்வாரிய அலுலகத்தில், ஐ.டி.ஐ., தொழில்பழகுனர் பயிற்சிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சீனுவாசன், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

விழுப்புரம் மின் பகிர்மான வட்டம் மூலம், ஐ.டி.ஐ.,யில், எலக்ட்ரிஷியன் மற்றும் ஒயர்மேன் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஓராண்டிற்கான தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளன.

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள், இந்த மாவட்டத்தில் நிரந்தர முகவரியுள்ளவர்கள் மட்டும், இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பெறுவோருக்கு, மாதந்தோறும் 7,709 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பழைய பவர் அவுஸ் ரோடு, விழுப்புரம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். கல்விச்சான்று, மாற்றுச்சான்று, தொழில்நுட்ப கல்விச்சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் 25 ம் தேதி மாலை 5:00 மணி வரை விழுப்புரம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு மேற்பார்வை பொறியாளர் சீனுவாசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment