FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 September 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- பொதுச்செயலாளர் செய்தி:

அன்புள்ள தலைமை ஆசிரியர் பெருமக்களே!
வேலை நிறுத்த நாட்களுக்கு ஊதியத்தைப் பிடித்தம் செய்யக் கூடாது என அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்திரவிட்ட பின்னரும், நீதிமன்ற உத்திரவை மதிக்காமல் ஒரு சில ஒன்றியங்களில் 22.08.2017 நாளைய ஊதியத்தைப் பிடித்தம் செய்ய உதவி தொடக்க அலுவலர்கள் முயன்று வருகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நீங்கள் அலுவலகத்திற்கு வழங்கும் சம்பளப் பட்டியலில் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்யாதீர்கள். ஒருவேளை பிடித்து பில் கொடுத்திருந்தீர்களேயானால் உடனடியாக திரும்பப் பெற்று முழு மாதத்திற்குரிய ஊதிய பில்லைக் கொடுங்கள். அதன் பிறகும் ஊதியம் பிடிக்கும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் பதில் கூறட்டும்.

-பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment