FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 October 2015

உலக சிக்கன நாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவு

உலக சிக்கன நாளை முன்னிட்டு, நிதி
சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகளை
மாணவர்களிடம் நடத்த, அனைத்து
பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; இதில்,
பணத்தை சிக்கனப்படுத்துவது குறித்த
அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.சர்வதேச
சிறுசேமிப்பு மற்றும் சிக்கன நாள் வரும், 30ம்
தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, அனைத்துப் பள்ளி
மாணவர்களுக்கும், சிக்கனத்தை வலியுறுத்தும்
போட்டிகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை
அறிவுறுத்தியுள்ளது.நிதியை சிக்கனமாக
பயன்படுத்துதல்; இந்திய ரூபாயின் உள்நாடு
மற்றும் சர்வதேச மதிப்பு;வங்கிகளின் சிக்கன
மற்றும் சேமிப்பு திட்டங்கள்; குடும்பங்களில்
சிக்கனத்தைபேணுவது போன்ற பல
தலைப்புகளில் மாணவர்களுக்கு போட்டிகள்
நடத்தப்படும்.பணத்தை வீணடிக்கா மல், அதை
சேமிப்பது குறித்து விளக்கம் அளிக்கவும், அரசு
மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகள்
அறிவுறுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment