FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 October 2015

Tnptf கடவூர் கிளை அக் 8 வேலைநிறுத்த போராட்ட நிலை

10.10.2015:

Tnptf கடவூர் கிளை அக் 8 வேலைநிறுத்த போராட்ட நிலை நமது உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதை மேலோட்டமாக உணரமுடிந்தது .

இதர சங்கங்களோடு இணைந்து உறுப்பினர்களை சந்திக்க இயலாத நிலை பற்றி மேலே பகிரப்பட்டுள்ள நமது மாவட்டத் தலைவர் திரு.ஜெயராஜ் அவர்களின் கட்டுரையை படியுங்கள் .கரூர் , கடவூர் போல சில வட்டாரங்களில் , வட்டார செய்தித் தொடர்பாளர்களின் பிற்போக்கான மனநிலையால் நமது சங்கம் புறக்கணிக்கப்படும் நிலை தொடர்கிறது. வட்டார செய்தித் தொடர்பாளர் என்பவர் , தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை காரணம் காட்டி குறிப்பிட்ட சங்கத்தை புறக்கணித்தல் கூடாது என்ற மாவட்டத் தலைவரின் மனநிலையைத்தான் நாமும் பிரதிபலிக்கிறோம்.
கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மா.செயலாளர் திரு.பெரியசாமி அவர்களின் கவன ஈர்ப்பு உரையைக் கவனித்தவர்களுக்குத் தெரியும் , "ஜேக்டோ மாவட்டசெய்தித் தொடர்பாளர் தம் பணியை மிகச்சிறப்பாக செய்ததால்தான் இந்த ஆர்ப்பாட்டம் இவ்வளவு சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது " என்று கூறி , ஜேக்டோவின் வட்டார செய்தித் தொடர்பாளர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை கோடிட்டுப் பேசியிருந்தார்கள்.
வெற்றியைத்தீர்மானிப்பது ஒற்றுமைதானேஒழிய வேறெதுவுமில்லை. இதை அனைவருமே புறிந்துகொள்ள வேண்டும் .

- வட்டாரச் செயலாளருக்காக சந்திரசூட் .

No comments:

Post a Comment