FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

2 October 2015

சென்னை பல்கலை. தொலைதூர தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி
படிப்புகளுக்கு நடத்தப்படவுள்ள
அரியர்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான
கடைசி நாள் அக்டோபர் 7-ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை
பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
தொலைதூரக்கல்வி இளங் கலை, முதுகலை
படிப்புகளுக்கு டிசம்பர் மாதம் நடைபெறும்
அரியர் தேர்வுகளுக்கு ஆன்லைனில்
விண்ணப்பித்து கட்டணம் செலுத்துவதற்கான
கடைசி நாள் அக்டோபர் 7-ம் தேதி வரை
நீட்டிக்கப்படுகிறது. அபராத கட்டணம் செலுத்தி
அக்டோபர் 14-ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பித்த
படிவத்தை உரிய கட்டணம் செலுத்தியதற்கான
ரசீதுடன் சமர்ப்பிக்குமாறு மாணவர்கள்
அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைனில்
விண்ணப் பிக்காத, நிர்ணயிக்கப்பட்ட
காலக்கெடுவுக்குள் தேர்வுக் கட்டணத்தை
செலுத்தாத மாணவர்கள் தேர்வெழுத
அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில்
கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment