FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 October 2015

தசாவதானி...........

நாள்தோறும் நான் பூசனை செய்யும் கோவில்
“பள்ளிக்கூடம்”
கோவிலைச் சுற்றிவரும் பக்தர்கள் “ பசங்க”
பள்ளியிலே பறந்து திரியும் நான் “ அரண்மனைக்
கிளி”
பள்ளியை ஆளவந்த நான் “ ஆளவந்தான்”
எனது பள்ளி வாழ்க்கை ஓர் “ஆல்பம் ”
குறும்பு செய்யும் மாணவர்களுக்கு நான்
“இம்சை அரசன் ”
வகுப்பறையைச் சுற்றி வரும் நான் ” ஈ”
அடிப்படையில் ஊதியம் குறைவு என்பதால் என்
வாழ்க்கை “ மிடில் கிலாஸ் மாதவன் ”
அடிப்படை அறிவைப் புகட்டுவதால் உள்ளத்தால்
நான் “பணக்காரன் ”
குழந்தைகளோடு விளையாடுவதால் மற்றவர்
பார்வைக்கு நான் “ படிக்காதவன் ”
குழந்தைகளின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து
கொள்ளும் நான் “ மேதை ”
பள்ளியில் கன்றுகள் வளர்த்து வரும் நான்
“தோட்டக்காரன் ”
பள்ளியைக் கோவிலாக்கும் நான் “தெய்வப்பிறவி ”
குழந்தைகளுக்காகப் பாடும் ஒவ்வொரு வரியும்
எனது “ அபூர்வ ராகங்கள்”
குழந்தைகளோடு சேர்ந்து பாடும் போது
என்னுள் கேட்கும் “ ஆனந்த ராகம் ”
வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு நான்
“கொடுத்துச் சிவந்த கை ”
வார்த்தைகளால் பேச இயலாத போது எனது
கைகள் “ துடிக்கும் கரங்கள் ”
பேச்சாற்றலினால் குழந்தைகள் என்னை
அழைப்பது “ எங்கள் அண்ணா ”
அறிவாற்றலால் குழந்தைகள் கூறும் “ எங்கள்
ஆசான் ”
தீண்டாமைக் களையைக் களைவதால் நானும் ஓர்
“பெரியார் ”
மதிய உணவை குழந்தைகளோடு
பகிர்ந்துண்பதால் நானும் ஓர் “ காமராசர்”
மாணவர்கள் ஓட்டுப் போடாமலே பள்ளிக்கு நான்
“முதல்வன் ”
பள்ளியில் உள்ள ஓட்டையை அடைக்கும் நான்
“மாடி வீட்டு மாப்பிள்ளை”
புத்தக மூட்டை சுமக்கும் நான் “சுமைதாங்கி ”
விலையில்லாப் பொருள்களை வினியோகிப்பதால்
நான் “வள்ளல் ”
விலையில்லாப் பொருளையும் விலைகொடுத்து
ஏற்றிவரும் நான் “ ரிக்‌ ஷாக்காரன் ”
முக்காலமும் சுமந்து வருவதால் நான்
“ஆட்டோகாரன்”
இவ்வேளைகளைச் செய்ய மறுத்தால் நான்
“புரட்சிக்காரன் ”
ஊதிய முரண்பாடுகளைக் களைய முரண்படும்
எங்கள் “ வருத்தப்படாத வாலிபர் சங்கம் ”
ஊதியம் குறைந்தாலும் குறையாத எங்கள்
சங்கங்களின் எண்ணிக்கை “49 o+ ”
மாத ஊதியம் உயராவிட்டாலும் சந்தாத்
தொகையை உயர்த்திக் கொடுக்கும் நான்
“உயர்ந்த மனிதன் ”
அனைத்து சங்கங்களுக்கும் சந்தா செலுத்த “நான்
மகான் அல்ல ”
சங்கத்தில் சேர மறுத்தால் நான் ஓர் “ அந்நியன் ”
எங்களில் சிலர் வட்டிக்கு விடுவதில் “வசூல்
ராஜா”
பள்ளித் தளவாடங்களைப் பாதுகாப்பதால் நான்
“காவல்காரன் ”
புரவலர்களிடம் கை கூப்பும் நான் “ சுயேட்சை
MLA”
மாணவர்களிடம் அன்பு காட்டும் நான்
“புன்னகை மன்னன்”
முப்பருவமும் மாணவர் படையைக் கையாளும்
நான் “தளபதி ”
பல்வகுப்புக் கற்பித்தலில் நான் பத்துத் தலை
“இராவணன் ”
5 வகுப்புகளுக்கும் நான் ஒருவனே பாடம்
நடத்துவது “ பஞ்ச தந்திரம் ”
5 வகுப்புகளையும் தேர்ச்சி பெற வைக்க நான்
வகுப்பது “ ராஜ தந்திரம் ”
எல்லையில் உள்ள மாணவர்களைக்
கண்காணிப்பதில் நான் “இராணுவ வீரன் ”
எல்லையில்லாத் தேர்ச்சி பெற வைப்பது எனது
“விதி ”
பட்டப் படிப்பு முடித்தும் நான் “ வேலையில்லாப்
பட்டதாரி ”
முதுமையானாலும் மாணவர்களால் மறக்க
முடியாத நான் “ ஜென்டில் மேன்”
மாணவத் தலைமுறை போற்றும் நான்
“வரலாற்று நாயகன் ”
எங்களில் சிலர் பள்ளி வேளையில் மறையும்
“மாயமான்கள் ”
மாயமான்களைக் கண்டறிய அதிகாரியிடும்
கட்டளை “ வேட்டையாடு விளையாடு”
வேட்டையில் சிக்கிய மான்கள் கேட்பது “ பாவ
மன்னிப்பு”
சத்துணவைப் பார்வையிடும் நான் “ சர்வர்
சுந்தரம்”
மாணவர்களைப் பாதுகாப்பதில் நான் “ பரமசிவன் ”
கற்பித்தலே எனது தொழிலாதலால் நானும் ஓர்
“தொழிலாளி ”
ஓய்வுவேளை என்பதே எங்கள் துறையில்
இல்லாததால் நானும் ஓர் “ உளைப்பாளி ”
கல்விக்கு ஒளி ஏற்றுவதால் நான் “ஆதவன் ”
SABL முறையில் பாடம் எடுப்பதால் நானும் ஓர்
“கஜினி ”
SABL முறையில் மாணவர்களை வெற்றி பெறச்
செய்வதில் நானும் ஓர் “ சிவாஜி”
காலை வழிபாட்டுக் கூட்டத்தில் நான் கூறுபவை
(GO 264) யாவும் “அரச கட்டளை”
ஆடிப்பாடி நடிப்பதால் நானும் ஓர் “ அவ்வை
சண்முகி ”
பள்ளிக்குள் நுழைந்ததும் “சின்ன பசங்க நாங்க ”
எழுத்தறியாக் குழந்தைக்கும் எழுதுகோல்
வழங்கும் நான் “ தர்மத்தின் தலைவன்”
எல்லா மாணவரும் கைகூப்பித் தொழுவதால்
நானும் ஓர் “எஜமான் ”
உத்தரவுகளை உடனே நிறைவேற்றும் நான்
“எந்திரன்”
உண்மையைச் சொல்லித் தரும் நான் “ உத்தம
புத்திரன்”
குழந்தைகள் என்னைப் பின்பற்றுவதால் நான்
“குரு ”
குழந்தைகள் சுற்றிவரும் என் வாகனம்
“மோட்டார் சுந்தரம் பிள்ளை ”
மதிய உணவிற்கு முன் என்னுள் கேட்கும்
“மௌனராகம்”
நன்மை விதைக்கும் நான் “ நல்லவனுக்கு
நல்லவன் ”
மாணவர்களுக்காக நான் “ நினைத்ததை
முடிப்பவன் ”
கல்லாமைக் கள்வனை விரட்ட வந்த நான்
“ஊர்க்காவலன்”
குழந்தைகளிடம் நான் காட்டும் அன்பு “ பாசமலர்”
குழந்தைகளுக்காக நான் எழுதும் பாடக்குறிப்பு
“பொக்கிஷம்”
SABL வானிலே பறக்கும் நான் “புதிய பறவை ”
SABL ல் நான் விதைக்கும் விதை “ புது நெல்லு
புது நாத்து ”
நான் எழுதும் உண் மை “ ரெட் ”
நான் கற்றுத்தரும் விளையாட்டு “ சதுரங்கம் ”
நான் எழுதும் கோப்புகள் “வரலாறு ”
நான் கூறும் கவிதை “ செந்தமிழ் பாட்டு ”
நான் கட்டமைத்த கல்விக்கூடம் “தாஜ்மஹால் ”
வருங்கால இந்தியாவை உருவாக்கும் நான்
“வல்லரசு ”
வருந்தாமல் ஒலிக்கும் என் குரல் “ சலங்கை
ஒலி ”
அயர்ந்தவனுக்கு நான் கூறும் அறிவுரை
“தூங்காதே தம்பி தூங்காதே ”
அயராமல் உழைப்பதால் என் முதுகில் தெரியும்
“மூன்றாம் பிறை ”
அதிகாரி வந்தால் என் உள்ளத்தில் கேட்கும் “ டிக்
டிக் டிக் ”
வந்தவர் சென்றால் பள்ளியில் ஒலிக்கும் “டும்
டும் டும் ”
4.10 க்குத் தெரியும் எங்களது “ கடமை
கண்ணியம் கட்டுப்பாடு ”
மாணவர்கள் சுற்றிவரும் நான்
“திருவண்ணாமலை ”
களப்பணியாற்றுவதில் நான் “ நாடோடி மன்னன் ”
படி நிலையில் உச்சிக்குக் கொண்டு செல்லும்
நான் “ஏணிப்படிகள் ”
வெற்றிக் கோப்பையில் விளக்கேற்றும் நான்
“பட்டணத்து பூதம்”
நான் அமைத்த கம்பிப் பந்தல் “ சிலந்தி வலை”
நம்பிக்கை இழந்தோருக்கு நான் சொல்வேன்
“உன்னால் முடியும் தம்பி ”
நான் சுழற்றும் ஆரோக்கியத்திற்கான “தர்மச்
சக்கரம்”
என் வேலைகளை பகிர ஒருவரும்
இல்லையாதலால் “நானே ராஜா நானே மந்திரி ”
ஔவையார் அட்டை எடுத்தால் நான் “ பாட்டு
வாத்தியார்”
நான் பெறும் பணியிடைப்பயிற்சி “மீண்டும்
கோகிலா”
நான் பதிக்கும் எழுத்துக்கள் “சிவகாசி ”
நான் உதிர்க்கும் சொல்லமுதம் “திருநெல்வேலி ”
என் வார்த்தைகளின் கூர்மை “ திருப்பாச்சி”
என் சொற்கலவைகள் “ திருப்பதி ”
நான் 5 வகுப்புகளிலும் கலந்த “பஞ்சாமிர்தம் ”
ஐந்து வகுப்புக்கும் அவதரித்த நான் “ தனி
ஒருவன்”
மொத்தத்தில் நான்
“ சதாவதானி”
மதிப்பெண் போடுவதில் மட்டுமல்ல!!
செயலிலும் தான்!!!
நானும்
“உன்னைப் போல் ஒருவன் ”
என் பெயர்
[[[[[[[[[[”இடைநிலை
ஆசிரியன் ” ]]]]]]]]]]
மேற்கண்ட காட்சிகள் 100 நாட்கள் ஓடியவை
மட்டுமல்ல !!!
எங்கள் வாழ்வில் 365 நாட்களும்
ஓடிக்கொண்டிருப்பவை !!!
இடைநிலையில் தவிக்கும் எங்களை
ஏற்றிவிடுங்கள் !!!
உச்சிக்கு அல்ல !!! உயர்வுக்கு !!!

No comments:

Post a Comment