FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 February 2017

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் பிப்ரவரி 28 க்கு தள்ளிவைப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி

ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் ஆகியவை சார்பில் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்து இருந்தது. 


இந்தநிலையில் 9 வங்கி ஊழியர்கள் சங்கம் இதே கோரிக்கையைவலியுறுத்தி பிப்ரவரி 28-ந்தேதி வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.


இதனால் 7-ந்தேதி நடக்க இருந்த வேலைநிறுத்தம் 28-ந் தேதிக்குதள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில்பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டுவங்கிகள், கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.



இவ்வாறு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தில்தமிழ்நாடு பொதுசெயலாளர் கிருஷ்ணன், அகில இந்திய வங்கிஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் வெங்கடாச்சலம் ஆகியோர்தெரிவித்து உள்ளனர் .

No comments:

Post a Comment