FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 November 2016

மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி: மத்திய அரசு

புதுடெல்லி:500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இன்று நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு புழக்கத்திற்கு வந்துள்ளன. இதனால் வங்கிகள் மற்றும் அஞ்சலக மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது.இரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்ததை அடுத்து நாளை முதல் அனைத்து ஏடிஎம்-களும் பயன்பாட்டுக்கு வருகின்றன. அந்த ஏடிஎம்-களில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை எடுத்துக் கொள்ள முடியும். இதனால் நாளை முதல் சில தினங்களுக்கு ஏடிஎம்-களில் அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், முக்கியமான ஏடிஎம்-களில் கூட்டத்தை தவிர்க்க மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.முன்னதாக மற்ற வங்கி ஏடிஎம்-களை 5 முறை வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கு தனிகட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு மத்திய அரசு  மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.இதனிடையே, பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment