FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 December 2015

இன்றைய கல்வி பார்வை:எளிதாக படிக்க இதோ வழி

தம்பி, படிக்க உட்காரு... என மாணவர்களிடம் தெரிவிப்பது, வேப்ப இலையை அரைத்துக் குடிக்க கொடுப்பதைப் போல அவர்களுக்கு தோன்றும். படிக்கும் முறைகளை, நம்மவர்கள் சரிவர கடைபிடிக்காததே இதற்கு காரணம்.

படிக்க சில எளிய வழிகள்

* அமைதியான சூழலில் படியுங்கள். உங்கள் எண்ணம் சிதறாமல், கவனம் திசை திரும்பாமல் இருக்கும். 
* அட்டவணை போட்டு படிக்க துவங்குகள். அன்றைய தினம் என்னென்ன பாடங்கள்
அட்டவணையில் உள்ளதோ, அதை அன்றே முடித்து விடுங்கள். 
* சிலருக்கு அதிகாலை படிக்க பிடிக்கும்; சிலருக்கு நள்ளிரவு படிக்க பிடிக்கும். உங்களுக்கு எந்த நேரம் சரியாக உள்ளது என்று ஆராய்ந்து படிக்கவும். 
* ஒரே நேரத்தில், இரண்டு வேலைகளை
பார்க்கும் மனப்பான்மையை மாற்றுங்கள்.
ஒரு வேலையை செய்யுங்கள். அதை ஒரு மனதாக செய்யுங்கள்.
* பெரிய வினாவை படித்தவுடனோ;
எழுதியவுடனோ சிறிது இடைவெளி எடுக்கலாம். அது, மூளையை சோர்வடையாமல் காக்கும். 
* தினமும் காலை யோகா செய்யும் பழக்கத்தை கடைபிடிக்கலாம். இது மனதை அமைதியாக
வைத்திருக்க உதவும். 
* படிக்கும் நேரத்தில் வேறு சிந்தனைகளையோ, மனதில் ஓட்டாதீர்.
* பிடிக்காத பாடத்தையும், விருப்பத்துடன் படிக்க பழகுங்கள். நடைமுறை வாழ்க்கையில் உள்ள சம்பவங்களுடன், ஒப்பிட்டு பாடங்களை படித்தால் எளிதில் புரியும். 
* பாடத்தை குறிப்பெடுத்து படித்தால்,
ரிவைஸ் செய்வதற்கு உதவியாக இருக்கும். 
* ஒரு பாடத்தை 2 அல்லது 3 முறை திரும்பி பார்த்தால் மட்டுமே, மனதில் நன்கு பதியும். 
* படித்து முடித்த பின், எழுதிப் பார்க்கலாம். அல்லது நண்பர்களுடன் படித்ததை கலந்து ஆலோசிக்கலாம். அவ்வாறு செய்தால், அவர்களிடமிருந்து நாம் படிக்காத சில தகவல்களையும் பெறலாம். சந்தேகங்களையும் தீர்க்கலாம்.

No comments:

Post a Comment