FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

9 October 2015

ஆசிரியர் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை எதிர்த்து மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை
எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு
பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ்
அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம்
புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக
பி.ஆரோக்கியதாஸ் என்பவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு
நடவடிக்கைக் குழு ("ஜாக்டோ') சார்பில்
வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தம்
செய்ய ஆசிரியர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில்
குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த
வேலைநிறுத்தப் போராட்டம் சட்டவிரோதம் என
அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த
மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்,
இது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு
நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment