FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

14 October 2015

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி
பயின்று, அறிவியல் துறையில் உலக
சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக
இருந்தவர் இவர்
ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ
உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி
இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும்
மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது
தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம்
செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே
கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள்
மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்
என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம்
செய்து கொள்ள மறுத்தார். அதுபோல
திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப்
பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது
என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல்
கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு
வினாடியும் காந்திய கொள்கைகளை
பிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர்
பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று
பேசாமல் இருக்க மாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான்
இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில
மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே
அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல்
கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள்
எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள்
ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும்
வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக
திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான
மனிதர்களை காண்பது அரிது என்று உலக
தலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி
அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல்
வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர்,
அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர்
விலகாமலே இருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர்
ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை
அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான
நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால்
ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக்
கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னை
முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர்
ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக
இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா
மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி
காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு
கூட்டமாக நின்று இறைவனை தொழுதது
குறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம்
கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர்
தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ
முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’
என்று அடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி
உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில்
கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம்
அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய
கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான
பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி
‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று
கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது
சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால்
இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும்
இல்லை’’ என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு
வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார்
ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே
இல்லை.
19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட,
அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு
பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை
அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள்
எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே
உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத
நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த
எடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும்,
எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர்.
ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர்
அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர்
தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக
இருந்தார்.
22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக
வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது
கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில்
நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.
23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா
2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில்
ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு
முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை
ஏற்படுத்தினார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–
ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த
பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48
ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற
சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம்
கற்றுக் கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி
அறிவியல் ஆசிரியர் சிதம்பரம்
சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல்
ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு
ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு
எதையும் சாப்பிட மாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை
உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த
வீணையை வாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத்
தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ்,
குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று
அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல்
அறிவியல் கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத்
தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது
அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு
‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை
கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம்
குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம்
இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம்
உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில
கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில்
படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம்
செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை
நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப்
போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி
பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை
நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக
அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர்
அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத்
துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த
போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250
வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி,
பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள்
அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த
போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு
கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய
போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை
ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான எடை
குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய
நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட்
கருவி ஆகியவை இவர் கண்டு
பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம்
ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும்
அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக
திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே
சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற
கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது
பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட
உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5
தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும்
சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று
டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல்
கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு
முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள்
பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு
முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம்
ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய
வைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி
மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள்,
உதவி செய்தவர்கள் என அனைவரையும்
அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு
அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில்
கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த
தயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்
என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார்.
ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர்
பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள்
ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி
என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு
பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர்
தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத்
தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள்
எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே
நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள்
உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை
நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள்
என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு
பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல்
கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற
புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும்
மேலாக அதை அவர் பொக்கிஷமாக
வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும்
உதவும் பெரிலியம் தாது பொருளை
வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன.
உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார்.
இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம்
மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை
கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல்
கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி
அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு
இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.
50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல்
கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை
குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன்
என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி
பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி,
கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று
அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான்
நிறைவுற்றது ,,..

No comments:

Post a Comment